என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமமோகன ராவ் அதிகார எல்லையை தாண்டி பேசுகிறார்: வைகோ குற்றச்சாட்டு
Byமாலை மலர்28 Dec 2016 3:07 AM GMT (Updated: 28 Dec 2016 7:20 AM GMT)
ராமமோகன ராவ் நேற்று வெடித்து சிதறுவதுபோல் கருத்துகள் கூறியிருப்பது அவருடைய அதிகார எல்லையையும் தாண்டிப் பேசுவதாக எனக்கு தோன்றுகிறது என்று வைகோ கூறி உள்ளார்.
சென்னை:
ராமமோகன ராவ் பேட்டி குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-
இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்படாத விசித்திரமான, வித்தியாசமான, அபூர்வமான நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது. தலைமைச் செயலாளர் இல்லமும், அலுவலகமும் வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டு உள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை. வருமான வரித்துறை சோதனைக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை.
மாநில காவல் துறையை பயன்படுத்தாமல், மத்திய அரசு காவல் துறையை பயன்படுத்துவதற்கு வருமான வரித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. ஆயினும் மாநில அரசுக்கும், மாநில காவல்துறைக்கும் தெரிவித்துவிட்டு இப்படிப்பட்ட சோதனையில் ஈடுபடுவது தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு கேடு செய்யாமல் இருக்கும். ராமமோகன ராவ் நேற்று வெடித்து சிதறுவதுபோல் கருத்துகள் கூறியிருப்பது அவருடைய அதிகார எல்லையையும் தாண்டிப் பேசுவதாக எனக்கு தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமமோகன ராவ் பேட்டி குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-
இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்படாத விசித்திரமான, வித்தியாசமான, அபூர்வமான நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது. தலைமைச் செயலாளர் இல்லமும், அலுவலகமும் வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டு உள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை. வருமான வரித்துறை சோதனைக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை.
மாநில காவல் துறையை பயன்படுத்தாமல், மத்திய அரசு காவல் துறையை பயன்படுத்துவதற்கு வருமான வரித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. ஆயினும் மாநில அரசுக்கும், மாநில காவல்துறைக்கும் தெரிவித்துவிட்டு இப்படிப்பட்ட சோதனையில் ஈடுபடுவது தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு கேடு செய்யாமல் இருக்கும். ராமமோகன ராவ் நேற்று வெடித்து சிதறுவதுபோல் கருத்துகள் கூறியிருப்பது அவருடைய அதிகார எல்லையையும் தாண்டிப் பேசுவதாக எனக்கு தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X