search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் தி.மு.க. இன்று மனித சங்கிலி போராட்டம்
    X

    தமிழகம் முழுவதும் தி.மு.க. இன்று மனித சங்கிலி போராட்டம்

    1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.
    சென்னை:

    1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து பொது மக்களை துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது.

    சென்னை அண்ணாசாலை பெரியார் சிலையில் இருந்து தேனாம்பேட்டை அன்பகம் வரை தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக சாலையின் ஒரு பகுதியில் அவர்கள் மனித சங்கிலி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்கிறார்கள்.

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கிவைக்கிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தி.மு.க. தொண்டரணி நிர்வாகிகள் சீருடையுடன் பங்கேற்கின்றனர்.

    மாவட்ட அளவில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
    Next Story
    ×