என் மலர்
செய்திகள்

3 தொகுதியில் ஆதரவு யாருக்கு?: த.மா.கா. முடிவு 24-ந்தேதி அறிவிப்பு - ஜி.கே.வாசன் பேட்டி
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் த.மா.கா. யாரை ஆதரிப்பது? அல்லது எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி வரும் 24-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:
சின்னகாஞ்சீபுரத்தில் த.மா.கா. நிர்வாகி படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தேர்தல் நடை பெற உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் த.மா.கா. யாரை ஆதரிப்பது? அல்லது எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேச உள்ளேன்.
அவர்களின் கருத்தை அறிந்த பின்பு அதன் அடிப்படையில் த.மா.கா.வின் முடிவு வருகிற 24-ந்தேதி (திங்கள்) அறிவிக்கப்படும்.
3 தொகுதி தேர்தல்களும் முறைப்படி நடக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதி முடிவடைகிறது.
தொடர்ந்து பணிகள் சிறப்பாக தொய்வின்றி நடக்க வேண்டும். எனவே தனி அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும்.
மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் காங்கிரசும் தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. எனவே அந்த கட்சிகளை புறக்கணிப்பது அவசியம்.
காவிரி பிரச்சனையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் துரோகம் இழைத்து விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் புருஷோத் தமன் உடன் இருந்தார்.
சின்னகாஞ்சீபுரத்தில் த.மா.கா. நிர்வாகி படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தேர்தல் நடை பெற உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் த.மா.கா. யாரை ஆதரிப்பது? அல்லது எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேச உள்ளேன்.
அவர்களின் கருத்தை அறிந்த பின்பு அதன் அடிப்படையில் த.மா.கா.வின் முடிவு வருகிற 24-ந்தேதி (திங்கள்) அறிவிக்கப்படும்.
3 தொகுதி தேர்தல்களும் முறைப்படி நடக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதி முடிவடைகிறது.
தொடர்ந்து பணிகள் சிறப்பாக தொய்வின்றி நடக்க வேண்டும். எனவே தனி அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும்.
மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் காங்கிரசும் தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. எனவே அந்த கட்சிகளை புறக்கணிப்பது அவசியம்.
காவிரி பிரச்சனையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் துரோகம் இழைத்து விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் புருஷோத் தமன் உடன் இருந்தார்.
Next Story






