என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர் பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை அரசு உடனே கூட்ட வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி
    X

    காவிரி நீர் பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை அரசு உடனே கூட்ட வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை அரசு உடனே கூட்ட வேண்டும் என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
    கடலூர்:

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட த.மா.கா.வினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், காவிரி நீர் பிரச்சனையில் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க கோரியும் அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    த.மா.கா. சார்பிலும் ஏராளாமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சையில் நாளை நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். கடலூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இது ஏற்கத்தக்கதல்ல.

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியும் காவிரி நீர் பிரச்சனையில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. இந்தியாவில் 125 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

    இதில் 25 கோடி மக்கள் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளனர். இதில் பெரும்பாலனாவர்கள் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவாக இருக்க வேண்டும்.

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

    ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×