என் மலர்
செய்திகள்

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக அரசு அரசியலாக்கி வன்முறையை தூண்டுகிறது - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
காவிரி நீர் பிரச்சனையை கர்நாடக அரசு அரசியலாக்கி வன்முறையை தூண்டுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.
ஆலந்தூர்:
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இது வருத்தம் அளிக்கிறது. அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீர்தான் கிடைத்து இருக்கிறது. இதனை அரசியல் ஆக்கி வன்முறையை தூண்டுகின்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு கூட்ட வேண்டும். இதில் பா.ஜனதா கலந்து கொள்ள தயாராக இருக்கிறது.
மேலும் தனிப்பட்ட முறையில் தமிழக பா.ஜனதா, நீர்வளத்துறை அமைச்சகத்திடமும், மத்திய தலைமைக்கும் காவிரி பிரச்சனையில் தமிழகம் - கர்நாடக நிலவரம் குறித்து தகவல் அளித்து உள்ளது.
காவிரி நீர் பிரச்சனையில் போராட்டம் தீர்வாக அமையாது. சரியான அணுகுமுறைதான் தீர்வை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இது வருத்தம் அளிக்கிறது. அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீர்தான் கிடைத்து இருக்கிறது. இதனை அரசியல் ஆக்கி வன்முறையை தூண்டுகின்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு கூட்ட வேண்டும். இதில் பா.ஜனதா கலந்து கொள்ள தயாராக இருக்கிறது.
மேலும் தனிப்பட்ட முறையில் தமிழக பா.ஜனதா, நீர்வளத்துறை அமைச்சகத்திடமும், மத்திய தலைமைக்கும் காவிரி பிரச்சனையில் தமிழகம் - கர்நாடக நிலவரம் குறித்து தகவல் அளித்து உள்ளது.
காவிரி நீர் பிரச்சனையில் போராட்டம் தீர்வாக அமையாது. சரியான அணுகுமுறைதான் தீர்வை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






