என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீரன்சின்னமலை நினைவிடத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மலர் தூவினார்.
    X
    தீரன்சின்னமலை நினைவிடத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மலர் தூவினார்.

    தீரன்சின்னமலைக்கு மணிமண்டபம் கட்ட முதலில் குரல் கொடுத்தவர் டாக்டர் ராமதாஸ்: ஜி.கே.மணி

    ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு மணி மண்டபம் கட்டி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவர் டாக்டர் ராமதாஸ் என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.
    ஈரோடு:

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி ஈரோடு அருகே உள்ள ஓடாநிலைக்கு வந்தார். அங்கு தீரன்சின்னமலை நினைவுநாளையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொங்கு மண்டலத்தில் நடந்து வரும் தொழில்கள் மூலம் இந்தியாவிலேயே அதிகமான அன்னிய செலவாணியை ஈட்டிகொடுக்கிறது. கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர் சமுதாய மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே அதிகமான மக்கள் தொகை கொண்ட கொங்கு வேளாளர் சமுதாயத்துக்கு தனிஇட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    கடந்த 20ஆண்டுக்கு முன் இதே ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு மணி மண்டபம் கட்டி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவர் டாக்டர் ராமதாஸ். அதன்படி தற்போது மணிமண்டபம் கட்டப்பட்டு அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது மகிழ்ச்சி.

    தமிழ்நாட்டில் உள்ள பல ஆறுகளில் இருந்து குறிப்பாக தாமிரபரணி போன்ற ஆறுகளிலிருந்து தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு அந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

    அத்திக்கடவு-அவினாசி, பாண்டியாறு-புன்னம்புழா போன்ற திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாநில துணை தலைவர் வடிவேல் மற்றும் பா.ம.க.நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×