என் மலர்
செய்திகள்

சட்டசபை தேர்தல்-என்.எல்.சி.தேர்தலில் தோல்வி: கடலூர் மாவட்ட பா.ம.க. கூண்டோடு கலைப்பு
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. ஒன்றிய, நகர, பேரூராட்சி அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பா.ம.க.வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கடலூர், விழுப்புரம், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் பா.ம.க. அதிக செல்வாக்கு உள்ள மாவட்டங்கள் ஆகும்.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். சட்டசபை தேர்தலில் 5 மாவட்டங்களில் அதிக அளவு பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்று நினைத்தனர்.
ஆனால் தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்தது. ஒரு தொகுதியிலும் கூட பா.ம.க.வெற்றி பெறவில்லை. அன்புமணி ராமதாசும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
சட்டசபை தேர்தலில் பா.ம.க.தோற்றது ஏன்? என்று மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது நிர்வாகிகள் சரியாக பணியாற்றவில்லை என்றும், மாற்றுக்கட்சிகளுடன் அவர்கள் இணக்கமாக இருந்ததும் தெரியவந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பா.ம.க.போட்டியிட்டது.
இங்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 17 சதவீத வாக்குகளே கிடைத்தன.
நெய்வேலி என்.எல்.சி.யில் பாட்டாளி தொழிற் சங்கம் பிரபலமாக இருந்து வந்தது. 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை என்.எல்.சி.யில் பாட்டாளி தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கமாக திகழ்ந்தது.
2012-ம் ஆண்டு நடந்த ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி என்.எல்.சி.நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. இதில் பாட்டாளி தொழிற்சங்கம் 1,291 வாக்குகள் மட்டுமே பெற்று பா.ம.க.தொழிற்சங்கம் தோல்வியை தழுவியது.
என்.எல்.சி. தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க டாக்டர்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அக்கறை காட்டினர்.
எனவே என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த தேர்தலில் 4-வது இடத்தை தான் பாட்டாளி தொழிற்சங்கம் பிடித்தது.
தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ம.க.அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானித்துள்ளது.
சட்டசபை தேர்தலைப் போல் வெற்றிவாய்ப்பை தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காக கட்சியை பலப்படுத்தவும், கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் பலர் உள்ளாட்சி தலைவர்களாகவும், ஒன்றிய கவுன்சிலர்களாகவும் உள்ளனர்.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் அதிக இடங்களை கைப்பற்ற தீர்மானித்துள்ளனர்.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பா.ம. க.ஒன்றிய, நகர, பேரூராட்சி அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிலவரத்தை அறிகிறார்கள்.
அதன்பின்னர் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் இதே போல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பா.ம.க.வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கடலூர், விழுப்புரம், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் பா.ம.க. அதிக செல்வாக்கு உள்ள மாவட்டங்கள் ஆகும்.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். சட்டசபை தேர்தலில் 5 மாவட்டங்களில் அதிக அளவு பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்று நினைத்தனர்.
ஆனால் தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்தது. ஒரு தொகுதியிலும் கூட பா.ம.க.வெற்றி பெறவில்லை. அன்புமணி ராமதாசும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
சட்டசபை தேர்தலில் பா.ம.க.தோற்றது ஏன்? என்று மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது நிர்வாகிகள் சரியாக பணியாற்றவில்லை என்றும், மாற்றுக்கட்சிகளுடன் அவர்கள் இணக்கமாக இருந்ததும் தெரியவந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பா.ம.க.போட்டியிட்டது.
இங்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 17 சதவீத வாக்குகளே கிடைத்தன.
நெய்வேலி என்.எல்.சி.யில் பாட்டாளி தொழிற் சங்கம் பிரபலமாக இருந்து வந்தது. 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை என்.எல்.சி.யில் பாட்டாளி தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கமாக திகழ்ந்தது.
2012-ம் ஆண்டு நடந்த ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி என்.எல்.சி.நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. இதில் பாட்டாளி தொழிற்சங்கம் 1,291 வாக்குகள் மட்டுமே பெற்று பா.ம.க.தொழிற்சங்கம் தோல்வியை தழுவியது.
என்.எல்.சி. தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க டாக்டர்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அக்கறை காட்டினர்.
எனவே என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த தேர்தலில் 4-வது இடத்தை தான் பாட்டாளி தொழிற்சங்கம் பிடித்தது.
தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ம.க.அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானித்துள்ளது.
சட்டசபை தேர்தலைப் போல் வெற்றிவாய்ப்பை தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காக கட்சியை பலப்படுத்தவும், கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் பலர் உள்ளாட்சி தலைவர்களாகவும், ஒன்றிய கவுன்சிலர்களாகவும் உள்ளனர்.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் அதிக இடங்களை கைப்பற்ற தீர்மானித்துள்ளனர்.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பா.ம. க.ஒன்றிய, நகர, பேரூராட்சி அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிலவரத்தை அறிகிறார்கள்.
அதன்பின்னர் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் இதே போல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Next Story






