என் மலர்
செய்திகள்

மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து போதிய நிதி ஒதுக்க வேண்டும்: புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் பேட்டி
பிரதமரிடம் தமிழக முதல்வர் அளித்த கோரிக்கைகள் மீது மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட த.மா.கா. தலைவர் கூகூர் சண்முகம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இயக்கத்தின் நிர்வாகிகள் தலைவர்கள் தொண்டர்கள் கூட்டம் என 5 கட்ட கூட்டம் நடந்துள்ளது. அதன் முடிவின்படி அவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
தேர்தல் முடிவினால் மக்கள் மாற்றத்திற்கு தயாராக இல்லை என்று என்னால் கூற முடியாது. தேர்தல் எப்படி நடந்தது என்று மக்களுக்கு தெரியும். மக்களுக்கு நம்பிக்கை தேர்தல் ஆணையத்தின் மீது வர வேண்டும். இதுவரை அந்த நம்பிக்கை மக்களிடம் வரவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை த.மா.கா. கடுமையாக கண்டிக்கிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. தக்காளி, பருப்பு ஆகியவற்றின் விலை உயர்விற்கு மத்திய அரசின் தவறான செயல்பாடுகள் தான் காரணம்.
பிரதமர் தமிழக முதல்வர் சந்திபபை பொறுத்த வரையில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அதற்கு உண்டான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்துள்ளதே தேர்தல் ஆணையத்தின் தோல்விக்கு உதாரணமாகும். வரும் காலங்களிலாவது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பலமான வலுவாக செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.
குறிப்பாக கோட்பாடுகள், நெறிமுறைகள் ஆகியவை எல்லாம் கண்டிப்போடு செயல்படும் விதமாக நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட த.மா.கா. தலைவர் கூகூர் சண்முகம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இயக்கத்தின் நிர்வாகிகள் தலைவர்கள் தொண்டர்கள் கூட்டம் என 5 கட்ட கூட்டம் நடந்துள்ளது. அதன் முடிவின்படி அவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
தேர்தல் முடிவினால் மக்கள் மாற்றத்திற்கு தயாராக இல்லை என்று என்னால் கூற முடியாது. தேர்தல் எப்படி நடந்தது என்று மக்களுக்கு தெரியும். மக்களுக்கு நம்பிக்கை தேர்தல் ஆணையத்தின் மீது வர வேண்டும். இதுவரை அந்த நம்பிக்கை மக்களிடம் வரவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை த.மா.கா. கடுமையாக கண்டிக்கிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. தக்காளி, பருப்பு ஆகியவற்றின் விலை உயர்விற்கு மத்திய அரசின் தவறான செயல்பாடுகள் தான் காரணம்.
பிரதமர் தமிழக முதல்வர் சந்திபபை பொறுத்த வரையில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அதற்கு உண்டான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்துள்ளதே தேர்தல் ஆணையத்தின் தோல்விக்கு உதாரணமாகும். வரும் காலங்களிலாவது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பலமான வலுவாக செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.
குறிப்பாக கோட்பாடுகள், நெறிமுறைகள் ஆகியவை எல்லாம் கண்டிப்போடு செயல்படும் விதமாக நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






