என் மலர்
செய்திகள்

புதுச்சேரியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா?: புதுக்கோட்டையில் ரெங்கசாமி பேட்டி
புதுச்சேரியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் ரெங்கசாமி புறப்பட்டு சென்றார்.
புதுக்கோட்டை:
புதுச்சேரி மாநில முதல்– அமைச்சர் ரெங்கசாமி புதுக்கோட்டை வந்தார். அங்குள்ள பிரசித்தி பெற்ற புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–
புதுச்சேரியில் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
தமிழகத்தில் மதுவிலக்கு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளிக்கிறதே, அதே போன்று புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் முதல்வர் ரெங்கசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Next Story






