என் மலர்
செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி உடன்பாடு: காங்கிரஸ்-21, தி.மு.க.-9 தொகுதிகளில் போட்டி
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், தி.மு.க. 9 தொகுதிகளிலும் போட்டியிட கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து தொகுதி பங்கீடு முடிவடைந்தது. தி.மு.க. தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, இன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் இன்று இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, புதுச்சேரியில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், தி.மு.க. 9 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
அடுத்தகட்டமாக தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து தொகுதி பங்கீடு முடிவடைந்தது. தி.மு.க. தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, இன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் இன்று இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, புதுச்சேரியில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், தி.மு.க. 9 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
அடுத்தகட்டமாக தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
Next Story






