என் மலர்
செய்திகள்

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
தமிழக மக்களுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நான் சொன்னதை செய்தேன். அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்துவேன்.
சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் மக்கள் கல்வி உடல்நலம் போன்றவற்றிலும் எனது தலைமையிலான அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. விவசாயம் மேம்பாடு அடைய எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஏழை எளிய மக்களுககு தரமான கல்வி வழங்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளால் அப்பல்கலைக் கழகத்தில் பல போராட்டம் நடத்தப்பட்டு 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தின்படி நிர்வாகம் முறையாக செயல்படவும், நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும் எனது தலைமையிலனா அரசு பல்கலைக் கழகத்தை எடுத்துக்கொண்டது. இதற்காக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 525 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது.
பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டதால் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட அனைதுது படிப்பகளுக்கும் வெளிப்படையான முறையில் கல்வித்துறை இடஒதுக்கீட்டு விதியின்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏனைய அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப்போல் அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கும் என்ற எச்சரிக்கை பெறப்பட்டவுடன் எனது அரசு துரித நடவடிக்கை எடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் வழங்கபப்டடது. புயலால் அழிந்த நீண்டகால பயிர்களை மீண்டும் பயிர் செய்ய உதவிகள் செய்யப்பட்டன. 800 கோடி ரூபாய் செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நான் சொன்னதை செய்தேன். அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்துவேன்.
சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் மக்கள் கல்வி உடல்நலம் போன்றவற்றிலும் எனது தலைமையிலான அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. விவசாயம் மேம்பாடு அடைய எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஏழை எளிய மக்களுககு தரமான கல்வி வழங்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளால் அப்பல்கலைக் கழகத்தில் பல போராட்டம் நடத்தப்பட்டு 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தின்படி நிர்வாகம் முறையாக செயல்படவும், நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும் எனது தலைமையிலனா அரசு பல்கலைக் கழகத்தை எடுத்துக்கொண்டது. இதற்காக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 525 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது.
பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டதால் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட அனைதுது படிப்பகளுக்கும் வெளிப்படையான முறையில் கல்வித்துறை இடஒதுக்கீட்டு விதியின்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏனைய அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப்போல் அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கும் என்ற எச்சரிக்கை பெறப்பட்டவுடன் எனது அரசு துரித நடவடிக்கை எடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் வழங்கபப்டடது. புயலால் அழிந்த நீண்டகால பயிர்களை மீண்டும் பயிர் செய்ய உதவிகள் செய்யப்பட்டன. 800 கோடி ரூபாய் செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
Next Story






