என் மலர்
செய்திகள்

திராவிட கட்சிகளால் மது விலக்கு கொண்டுவர முடியாது: முரளிதரராவ்
தமிழகத்தில் திராவிட கட்சிகளால் மது விலக்கு கொண்டு வர முடியாது. இதனை கூற அவர்களுக்கு தகுதி இல்லை என்று பா.ஜனதா தேசிய செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.
காஞ்சீபுரம்:
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் இன்று காலை காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:–
தமிழகத்தில் திராவிட கட்சிகளால் மது விலக்கு கொண்டு வர முடியாது. இதனை கூற அவர்களுக்கு தகுதி இல்லை. இது ஏமாற்று வேலை.
மது ஆலை உரிமையா ளர்களுக்கும் திராவிட கட்சி களுக்கும் தொடர்பு உள்ளது.
வருகிற 15 அல்லது 16–ந்தேதி அன்று பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
இதில் விவசாயம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முக்கிய அம்சமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






