என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம்
    X

    வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம்

    வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் கரியாப்பட்டினம், செங்காந்தலை, மணக்காடு, கத்தரிப்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு பல்வேறு உதவிகளும், மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள், மடிக்கணினி, ஸ்கூல்பேக், இல்லத்தரசிகளுக்கு கிரைண்டர், மிக்ஸி, பேன், 20 கிலோ இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை என ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், முதியோர் உதவித்தொகை 1000–த்திலிருந்து 1,500, பெண்களுக்கு 50 சதவீகிதம் மானிய விலையில் ஸ்கூட்டீ உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வழங்க உள்ளார் என்று பேசினார்.

    வேதாரண்யம் ஒன்றியச் செயலாளர் கிரிதரன், தொகுதிச் செயலாளர் சண்முகராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஓளவை பாலசுப்பிரமணி, தலைமை கழகப் பேச்சாளர் வேதை.சிவசண்முகம், பாலைசெல்வராஜ், வாய்மை இனஞ்சேரன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்.

    Next Story
    ×