என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இந்த முறைகளில் அமர்ந்து தாய்ப்பால் கொடுப்பது நல்லது
Byமாலை மலர்7 Dec 2020 7:10 AM GMT (Updated: 7 Dec 2020 7:10 AM GMT)
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது சில நிலைகளில் அமர்ந்து கொடுப்பது குழந்தைக்கும்,உங்களுக்கும் சௌகரியமாக இருப்பது அவசியம் அதோடு பால் வேகமாக வரவும் ஏதுவாக இருக்கும்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கான முதல் உணவு தாய்ப்பால். அதற்கு ஈடு இணையான ஊட்டச்சத்து எதுவுமில்லை எனலாம். எனவே அதை மேலோட்டமாக அணுகுவதை விட உள்ளார்ந்த உணர்வுடன் விரும்பி கொடுக்கும்போது அதன் ஆரோக்கியம் மேலும் கூடுகிறது.
அப்படிக் கொடுக்கும்போது சில நிலைகளில் அமர்ந்து கொடுப்பது குழந்தைக்கும்,உங்களுக்கும் சௌகரியமாக இருப்பது அவசியம் அதோடு பால் வேகமாக வரவும் ஏதுவாக இருக்கும். அவை என்னென்ன பார்க்கலாம்.
தொட்டில் பிடி நிலை : இது பொதுவாக குழந்தைக்கு முதன் முதலில் பால் கொடுக்கும்போது துவங்கும் நிலைதான். இரு கைகளால் தொட்டிலில் படுக்க வைப்பது போல் பிடித்துக்கொண்டு பால் தருவார்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். பழகிவிட்டால் இந்த நிலைதான் சௌகரியம் என நினைப்பீர்கள்.
தொட்டில் பிடி நிலை : இது பொதுவாக குழந்தைக்கு முதன் முதலில் பால் கொடுக்கும்போது துவங்கும் நிலைதான். இரு கைகளால் தொட்டிலில் படுக்க வைப்பது போல் பிடித்துக்கொண்டு பால் தருவார்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். பழகிவிட்டால் இந்த நிலைதான் சௌகரியம் என நினைப்பீர்கள்.
குறுக்கு தொட்டில் பிடி : இது குழந்தையை குறுக்காக ஒரு கையில் பிடித்தபடி கொடுக்கும் நிலை. சிறு குழந்தையாக 6 மாதக் குழந்தையாக இருக்கும் வரை இப்படி கொடுப்பது சௌகரியமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கு முலைகளைப் பிடித்துக் குடிக்க நல்ல நிலை.
கால்பந்து நிலை : கேட்பதற்கு சற்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அதிகபட்சமாக இரட்டை குழந்தைகள் பிறந்தால் ஒரே நேரத்தில் பால் கொடுக்க இந்த நிலை சிறந்தது. அதேபோல் பெரிய மார்பகங்கள் கொண்டவர்களுக்கும் வசதியானது. மற்றவர்களுக்கும் இந்த நிலை சௌகரியமாக இருந்தால் கொடுக்கலாம்.
பக்கவாட்டில் ஒருபுறமாக சாய்ந்த நிலை : படுத்தபடி ஒரு புறமாக திரும்பி பால் கொடுப்பதுதான். இரவில் ஆரம்ப காலகட்டத்தில் பாலுக்காக அடிக்கடி அழும் குழந்தைக்கு அமர்ந்துகொண்டு பால் கொடுக்க முடியவில்லை எனில் இந்த நிலையில் படுத்துக் கொண்டு கொடுக்கலாம். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் காயம் ஆறும் வரை இந்த நிலை சௌகரியமாக இருக்கும்..
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X