என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ராஜஸ்தான் ஸ்பெஷல் தால் டோக்ளி
Byமாலை மலர்27 April 2017 9:54 AM GMT (Updated: 27 April 2017 9:54 AM GMT)
ராஜஸ்தானில் இந்த தால் டோக்ளி மிகவும் பிரபலம். நம்ம ஊர் மினி சாம்பார் இட்லி போல் தான் இந்த தால் டோக்ளி. இதை மாலையில் டிபன் போல் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவிற்கு...
கோதுமை மாவு - 1/2 கப்,
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1 டீஸ்பூன்,
ஓமம் - 1/2 டீஸ்பூன் சிறிது கசக்கியது,
சீரகம் - 3/4 டீஸ்பூன்
தால் ...
துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு ஏதாவது ஒன்று.
துவரம் பருப்பு - 1/2 கப்,
தண்ணீர் - 2 கப்.
தாளிக்க...
நெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது,
பச்சை மிளகாய் - 1,
காய்ந்த மிளகாய் - 1,
கறிவேப்பிலை - 8,
தக்காளி - 1,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
தனியாத் தூள் - 1 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மாவிற்கு கொடுத்த அனைத்தையும் தேவையான தண்ணீர் விட்டு மெதுவாக ரொட்டி மாவாக பிசைந்து, 30 நிமிடம் மூடி வைக்கவும்.
* பருப்பை நன்றாக கழுவி, தண்ணீர் 2 கப் சேர்த்து ஊற வைத்து, குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து இறக்கவும். விசில் போனவுடன் கடைந்து கொள்ளவும்.
* ஒரு தவாவை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சீரகம், பெருங்காயம், ப.மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கி வரும் போது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, வெந்தப் பருப்பை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* பிசைந்து மூடி வைத்துள்ள டோக்ளி மாவை எடுத்து கையில் 1 டீஸ்பூன் நெய் தடவிக் கொண்டு, ஒரு பெரிய (Roti) ரொட்டியாக தேய்த்து விருப்பமான வடிவத்தில் சதுரமாகவோ, வட்டமாகவோ 1/2 இஞ்ச் நீளத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 2 கப் ஊற்றி நன்கு கொதிக்கும் போது அதில் நெய் 1 டீஸ்பூன் விட்டு, இப்போது டோக்ளியை ஒவ்வொன்றாக அதில் போட்டு கொதிக்க விடவும். வெந்தவுடன் அனைத்தும் மேலே எழும்பி வரும்.
* வெந்தவற்றை தயாராக வைத்துள்ள பருப்பு தாலில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை, நெய் 1 டீஸ்பூன் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
குறிப்பு: நம் மினி இட்லி சாம்பார் போல் தால் டோக்ளி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மேல் மாவிற்கு...
கோதுமை மாவு - 1/2 கப்,
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1 டீஸ்பூன்,
ஓமம் - 1/2 டீஸ்பூன் சிறிது கசக்கியது,
சீரகம் - 3/4 டீஸ்பூன்
தால் ...
துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு ஏதாவது ஒன்று.
துவரம் பருப்பு - 1/2 கப்,
தண்ணீர் - 2 கப்.
தாளிக்க...
நெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது,
பச்சை மிளகாய் - 1,
காய்ந்த மிளகாய் - 1,
கறிவேப்பிலை - 8,
தக்காளி - 1,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
தனியாத் தூள் - 1 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மாவிற்கு கொடுத்த அனைத்தையும் தேவையான தண்ணீர் விட்டு மெதுவாக ரொட்டி மாவாக பிசைந்து, 30 நிமிடம் மூடி வைக்கவும்.
* பருப்பை நன்றாக கழுவி, தண்ணீர் 2 கப் சேர்த்து ஊற வைத்து, குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து இறக்கவும். விசில் போனவுடன் கடைந்து கொள்ளவும்.
* ஒரு தவாவை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சீரகம், பெருங்காயம், ப.மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கி வரும் போது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, வெந்தப் பருப்பை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* பிசைந்து மூடி வைத்துள்ள டோக்ளி மாவை எடுத்து கையில் 1 டீஸ்பூன் நெய் தடவிக் கொண்டு, ஒரு பெரிய (Roti) ரொட்டியாக தேய்த்து விருப்பமான வடிவத்தில் சதுரமாகவோ, வட்டமாகவோ 1/2 இஞ்ச் நீளத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 2 கப் ஊற்றி நன்கு கொதிக்கும் போது அதில் நெய் 1 டீஸ்பூன் விட்டு, இப்போது டோக்ளியை ஒவ்வொன்றாக அதில் போட்டு கொதிக்க விடவும். வெந்தவுடன் அனைத்தும் மேலே எழும்பி வரும்.
* வெந்தவற்றை தயாராக வைத்துள்ள பருப்பு தாலில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை, நெய் 1 டீஸ்பூன் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
குறிப்பு: நம் மினி இட்லி சாம்பார் போல் தால் டோக்ளி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X