என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை
    X

    வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

    கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம்.
    தேவையான பொருட்கள் :

    நல்லெண்ணை - 5 தேக்கரண்டி
    வேர்கடலை - 1/4 கப்
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    புளி - சிறிய எலுமிச்சை அளவு
    உப்பு - தேவையான அளவு
    அரிசி - 2 கப்

    வறுத்து பொடிக்க :

    நல்லெண்ணை - 1 1/2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    தனியா - 1/2 தெக்கரண்டி
    வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
    எள்ளு - 1 தேக்கரண்டி

    செய்முறை :


    * வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரிசியை உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

    * புளியை கரைத்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கடலை பருப்பு, உளுந்து, வேர்கடலை சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

    * அடுத்து, புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    * இப்போது உப்பு போடக் கூடாது. ஏன்னா, கொதிச்ச பிறகு குழம்பு அளவு கம்மியாகும் போது உப்பு அதிகமாகிடும். அதனால் சாப்பாடு கிளரும் போது உப்பு போட்டுக்கொள்ளலாம்.

    * புளிக்கரைசல் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்ததும் உதிரியாக வடித்த சாதம், தேவையான அளவு உப்பு சோத்து, அதனுடன் அரைத்து வைத்த அந்த பொடியையும் தேவையான அளவுக்கு சேர்த்து கலந்துவிடவும்.

    * 20 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.

    * சூப்பரான கோவில் புளியோதரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×