என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு - 65
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு - 65

    உருளைக்கிழங்கை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான ஆலு - 65 செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    மிளகாய் வற்றல் - 4
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - அரை அங்குலத் துண்டு
    தயிர் - கால் கப்
    மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
    சோள மாவு - ஒன்றரை மேசைக்கரண்டி
    உப்பு - கால் தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்
    எண்ணெய் - முக்கால் கப்


    செய்முறை :

    * உருளைக்கிழங்கை பாதியளவு வேக வைத்து சதுரமான துண்டுகளான வெட்டிக்கொள்ளவும்.

    * பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

    * இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.

    * பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

    * கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

    * மைதா மாவு மற்றும் சோள மாவு இரண்டையும் தனித்தனியாக சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    * மிக்ஸியில் மிளகாய் வற்றல், நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைகிழங்கு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், பேக்கிங் பவுடர், உப்பு, அரைத்த விழுது போட்டு உருளைக்கிழங்குடன் விழுது ஒன்றாக சேரும் படி நன்கு பிரட்டி விடவும்.

    * பிரட்டிய பிறகு அதில் தயிர், சோள மாவு, மைதா மாவு போட்டு நன்றாக பிரட்டி வைத்து, அதை அரைமணி நேரம் ஊற விடவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு சிவந்து பொன்னிறம் ஆனதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.

    * மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளித்த பின் அதில் வறுத்த  உருளைக்கிழங்கை போட்டு ஒரு நிமிடம் பிரட்டி இறக்கி வைக்கவும்.

    * சூடான ஆலு 65 தயார். இது ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதே போல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×