என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தித்திப்பான ரவை - தேங்காய் உருண்டை
    X

    தித்திப்பான ரவை - தேங்காய் உருண்டை

    ரவையுடன், தேங்காய் சேர்த்து உருண்டை செய்தால் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    ரவை - ஒரு கப்,
    வறுத்த தேங்காய் துருவல் - அரை கப்,
    சர்க்கரை - ஒரு கப்,
    வறுத்த முந்திரி, திராட்சை - தேவைக்கு
    நெய் - 50 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

    செய்முறை:  

    * கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் ரவையை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

    * வறுத்த ரவையை ஒரு அகலமான தட்டில் கொட்டி அவற்றுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்குபோது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.

    * காய்ச்சிய சர்க்கரை பாகை ரவை கலலையில் சேர்த்து சற்று சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும்.

    * சுவையான ரவை - தேங்காய் உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×