என் மலர்
பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பீட்சா
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பீட்சாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பீட்சா பேஸ் - ஒன்று
பன்னீர் - ஒரு பாக்கெட்
சீஸ் - 50 கிராம்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
செய்முறை :
* வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சீஸை நன்கு துருவிக் கொள்ளவும்.
* பன்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக எடுத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும்.
* பீட்சா பேஸில் முதலில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.
* அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும்.
* பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.
* வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.
* அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, கொரகொரப்பாக பொடித்த மிளகாயைத் தூவவும்.
* கடைசியாக அதன் மீது சீஸைத் தூவவும்.
* இப்போது இதை மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்..
* சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.
* மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் தோசை தவாவை அடுப்பில் மிதமான தீயில் வைத்து செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பீட்சா பேஸ் - ஒன்று
பன்னீர் - ஒரு பாக்கெட்
சீஸ் - 50 கிராம்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
செய்முறை :
* வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சீஸை நன்கு துருவிக் கொள்ளவும்.
* பன்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக எடுத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும்.
* பீட்சா பேஸில் முதலில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.
* அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும்.
* பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.
* வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.
* அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, கொரகொரப்பாக பொடித்த மிளகாயைத் தூவவும்.
* கடைசியாக அதன் மீது சீஸைத் தூவவும்.
* இப்போது இதை மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்..
* சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.
* மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் தோசை தவாவை அடுப்பில் மிதமான தீயில் வைத்து செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






