என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பீட்சா
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பீட்சா

    குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பீட்சாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்சா பேஸ் - ஒன்று
    பன்னீர் - ஒரு பாக்கெட்
    சீஸ் - 50 கிராம்
    வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று
    தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத் தூள் - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - 4

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சீஸை நன்கு துருவிக் கொள்ளவும்.

    * பன்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    * காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக எடுத்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும்.

    * பீட்சா பேஸில் முதலில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

    * அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும்.

    * பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.

    * வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.

    * அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, கொரகொரப்பாக பொடித்த மிளகாயைத் தூவவும்.

    * கடைசியாக அதன் மீது சீஸைத் தூவவும்.

    * இப்போது இதை மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்..

    * சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.

    * மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் தோசை தவாவை அடுப்பில் மிதமான தீயில் வைத்து செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×