என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி
    X

    ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

    ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ
    மட்டன் எலும்புடன் - 400 கிராம்
    பழுத்த தக்காளி - நான்கு
    வெங்காயம் - நான்கு
    பச்சை மிளகாய் - நான்கு
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி
    தயிர் - கால் கப்
    கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி
    புதினா இலை - கால் கைப்பிடி
    எண்ணெய் - அரை டம்ளர்
    நெய் - இரண்டு தேக்கரண்டி
    பட்டை - இரண்டு அங்குலம் அளவு ஒன்று
    கிராம்பு - இரண்டு
    ஏலக்காய் - இரண்டு
    பிரிஞ்சி இலை - இரண்டு
    ஷாஜீரா - அரை தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி
    பாதாம் - ஐந்து
    சஃப்ரான் (குங்குமப்பூ) - ஐந்து இதழ்

    செய்முறை :

    * அரிசியை களைந்து ஊற வைக்கவும்.

    * வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    * தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    * பாதாமை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

    * சஃப்ரானை ஒரு மேசைக்கரண்டி சூடான பாலில் கரைத்து வைக்கவும்.

    * மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, ஷாஜீரா, கிராம்பு ஆகியவற்றை போடவும். லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்கு சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.

    * குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மட்டனை வேக விடவும்.

    * இப்போது மட்டன் லேசாக வெந்து சுருண்டு இருக்கும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.

    * தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.

    * அதன் பின்னர் தயிர், பாதாம் விழுது, பாலுடன் கரைத்து வைத்திருக்கும் சஃப்ரான் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.

    * எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும். அப்படியே ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.

    * பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.

    * அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.

    * கொதித்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.

    * ஆவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை பிரட்டி விட்டு உடனே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அப்படியே விட்டால் கட்டி பிடித்து விடும்.

    * சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×