என் மலர்
பெண்கள் உலகம்

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்
சளி தொல்லைக்கு நாட்டுகோழிக்கறி சூப் குடிக்கலாம். சூப் குடித்த பின்னர் இருக்கும் சிக்கனில் மிளகு போட்டு வறுவல் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான்.
தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி - ஒரு கிலோ
பெரியவெங்காயம் - 3
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகுதூள் - 4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* நாட்டுக்கோழியை துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வரை விட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்தால் தான் சிக்கன் பஞ்சுபோல ஆகும்.
* விசில் போனவுடன் சிக்கனை எடுத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை சூப் போல குடிக்கலாம் சளி நீங்கும்.
* வெந்த சிக்கனை கை பொறுக்கும் சூட்டில் சின்ன சின்ன பீஸாக பிய்ந்து தட்டில் வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். இத்துடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
* நன்றாக வதக்கிய உடன் காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.
* இதனுடன் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி நன்றாக ப்ரை ஆகும் வரை வதக்கவும்.
* இப்போது சீரகத்தூள், பெப்பர் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
* தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
* சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வருவல் தயார்.
* இது மழைக்காலத்திற்கு ஏற்ற சூப்பரான சைடு டிஷ்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாட்டுக்கோழி - ஒரு கிலோ
பெரியவெங்காயம் - 3
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகுதூள் - 4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* நாட்டுக்கோழியை துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வரை விட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்தால் தான் சிக்கன் பஞ்சுபோல ஆகும்.
* விசில் போனவுடன் சிக்கனை எடுத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை சூப் போல குடிக்கலாம் சளி நீங்கும்.
* வெந்த சிக்கனை கை பொறுக்கும் சூட்டில் சின்ன சின்ன பீஸாக பிய்ந்து தட்டில் வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். இத்துடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
* நன்றாக வதக்கிய உடன் காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.
* இதனுடன் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி நன்றாக ப்ரை ஆகும் வரை வதக்கவும்.
* இப்போது சீரகத்தூள், பெப்பர் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
* தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
* சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வருவல் தயார்.
* இது மழைக்காலத்திற்கு ஏற்ற சூப்பரான சைடு டிஷ்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






