என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    இனிப்பான அடைப்பிரதமன் செய்வது எப்படி
    X

    இனிப்பான அடைப்பிரதமன் செய்வது எப்படி

    கேரளாவின் பாரம்பரியமான டிஷ்ஷான அடைப்பிரதமன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    வெல்லம் - 100 கிராம்,
    தேங்காய் - ஒன்று,
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை,
    நெய் - தேவையான அளவு,
    எண்ணெய் - சிறிதளவு.

    செய்முறை :

    * தேங்காயை துருவி மிக்சியில் போட்டு அரைத்து பால் எடுக்கவும்.

    * பச்சரிசியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும்.

    * ஒரு தட்டில் எண்ணெய் தடவி பச்சரிசி மாவை ஊற்றி, ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும்.

    * அடுப்பில் அடிகனமான ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அடை துண்டுகளுடன் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    * கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுத்து அடைப் பிரதமனில் சேர்க்கவும்.

    * கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×