என் மலர்
பெண்கள் உலகம்

தித்திப்பான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி
அல்வா பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. இப்போது தித்திப்பான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பூசணிக்காய் - 300 கிராம்
பால் - 500 மி.லிட்டர்
வெல்லம் - 400 கிராம்
முந்திரி - 15
திராட்சை - 15
பாதாம் - 15
நெய் - 250 கிராம்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - அரை ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
* பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
* சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.
* பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கொண்டே இருக்கவும்.
* அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும்.
* மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.
* கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் (ஓரங்களில் நெய் வெளிவர ஆரம்பிக்கும் போது) ஏலக்காய்த் தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும்.
* நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பூசணிக்காய் - 300 கிராம்
பால் - 500 மி.லிட்டர்
வெல்லம் - 400 கிராம்
முந்திரி - 15
திராட்சை - 15
பாதாம் - 15
நெய் - 250 கிராம்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - அரை ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
* பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
* சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.
* பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கொண்டே இருக்கவும்.
* அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும்.
* மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.
* கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் (ஓரங்களில் நெய் வெளிவர ஆரம்பிக்கும் போது) ஏலக்காய்த் தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும்.
* நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






