search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கான பாகற்காய் வறுவல்
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கான பாகற்காய் வறுவல்

    சர்க்கரை நோயாளிகள் வாரம் மூன்று முறை பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். பாகற்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன/பெரிய பாகற்காய் - 1 /4 கிலோ
    மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
    தனியா பொடி - 1 தேக்கரண்டி
    சீரகப்பொடி  - 1 /2 தேக்கரண்டி
    மஞ்சள் பொடி - கொஞ்சம்
    தயிர் - 1 தேக்கரண்டி
    பூண்டு - 4  பல்
    சின்ன வெங்காயம் - .10
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - கொஞ்சம்

    செய்முறை :

    * பாகற்காயை நன்கு கழுவி விதையை எடுத்து விட்டு நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டை நன்கு தட்டிகொள்ளவும்.

    * வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாகற்காய் அத்துடன், மிளகாய், தனியா, மஞ்சள், சீரகப் பொடி, தயிர், பூண்டு, உப்பு போட்டு நீர் ஊற்றாமல் பிசையவும். இதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.

    * பிறகு, அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின்னர் பிசறி வைத்த பாகற்காயை போடவும்.

    * தீயை மிதமாக வைக்கவும். அடிக்கடி பிரட்டி விடவும். 15 நிமிடத்தில் காய் வெந்து, நல்ல கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும்.

    * கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * இந்த பாகற்காய் வறுவல் கசப்பாக இருக்காது. சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு நல்ல துணைக் கறி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×