என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    பிரண்டை செடியை  உதாசீனம் செய்யாதீர்கள்...
    X

    பிரண்டை செடியை உதாசீனம் செய்யாதீர்கள்...

    • சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.
    • பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.

    வைரம் பிரண்டை சாற்றில் பொடி ஆகும் என்று போகர் சித்தர் பெருமான் கூறினார்.

    உலகிலேயே கடினமான பொருள் வைரம். வைரத்தில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை பிரண்டை சாறுக்கு உண்டு!

    இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கால் வலி, கை வலி சுத்தமாக இருக்காது என்பது மட்டும் அல்ல. உடல் சோர்வு அறவே இல்லாமல் செய்து விடும் பிரண்டை. ஏர் உழும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, கொத்தமல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த பொற்காலத்தை நாம் மறந்து விட்டோம்.

    பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மஞ்ஞையில் திரவம் அதிகமாக சுரக்க செய்யும். அது மட்டும் இன்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தி ஆகும்.பிரண்டை உப்பை சுமார் 300 மி.கி. தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது.

    சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் அல்லது உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும். பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.

    நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும் போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை டயாலிசிஸ் பண்ண வேண்டும் என்று சம்மந்தப்பட்டவர்கள் யோசியுங்கள்.

    பிரண்டையின் மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரம் ஆக்கும்.

    Next Story
    ×