என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மூட்டுவலி, தேய்மானத்திற்கு நவீன சிகிச்சை
    X

    மூட்டுவலி, தேய்மானத்திற்கு நவீன சிகிச்சை

    • 40-50 வயதை கடந்த பெண்களும், ஆண்களும் அதிகப்படியாகவே அவதிப்பட்டு வருகின்றனர்.
    • மூட்டு தேய்மானத்தில் நான்கு நிலைகள் உள்ளன.

    இன்றைய காலக்கட்டத்தில் அவசர உலகத்தில் இயந்திர தனமாக அனைவரும் ஓடிக் கொண்டே பூமியை விட வேகமாக சுழன்று கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாம் நிற்க நடக்க, உட்கார வேலை செய்ய வாகனங்களை இயக்க என எல்லா விதத்திலும் நமக்கு கால்கள் மிகவும் அவசியம். அவ்விதத்தில் முழங்கால் மூட்டு வலி (Knee Pain) என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக உள்ளது. அதிலும் 40-50 வயதை கடந்த பெண்களும், ஆண்களும் சற்று அதிகப்படியாகவே அவதிப்பட்டு வருகின்றனர்.

    மூட்டு தேய்மானத்தை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்

    மூட்டு தேய்மானத்தில் நான்கு நிலைகள் உள்ளன. அதனை கதிர்வீச்சு (X-Ray) பரிசோதனை மூலமாகவே அறிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்டவரின் மூட்டு தேய்மானம் எந்த நிலையில் உள்ளது என்பதை பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும்.

    சிகிச்சை முறைகள்:

    மூட்டு தேய்மானத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் வலி நிவாரணி மாத்திரைகள், இயன்பயிற்சிகள், வாழ்கை முறை மாற்றத்தின் மூலமாகவே தீர்வு காணலாம். சில சமயங்களில் அறிகுறிகள் ஏதும் இல்லாமலே அடுத்தடுத்த மூட்டு தேய்மான நிலைகளுக்கு செல்லலாம். ஏன்பதனை தெரிந்து கொள்வது மிக அவசியம் எனவே மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கான காரணங்கள், உதாரணத்திற்கு தரையில் சம்மணமிட்டு அமர்வது, அடிக்கடி படிக்கட்டுகள் ஏறுவது, அதிக நேரம் நிற்பது அல்லது நடப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும் பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    மூன்றாவது நிலையில் உள்ள தேய்மானத்திற்கு மூட்டு பகுதியல் ஊசி (Intra articular injection), HTP (High Tibial Osteotomy) போன்ற சிகிச்சை முறைகள் மூலம் தீர்வு காணலாம். தற்சமயம் அதிநவீன சிகிச்சையாக Stem Cell Therapy (குருத்தணு) மிகவும் பயன் உள்ளதாக கருதப்படுகின்றது. Stem Cell Therapy (குருத்தணு) எனும் சிறப்பு சிகிச்சை பலரும் அறிந்திராத ஒன்று Stem Cell Therapy (குருத்தணு) என்பது இயற்கையாகவே இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை செலுத்துவதாகும். இதன் படி பாதிக்கப்பட்ட மூட்டு பகுதியில் புதிய செல்களை ஊசி மூலமாக பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தி (Regeneration) சரி செய்யும் எளிய முறையாகும். இந்த சிகிச்சை முறையில் வலி நிவாரணம் என்பது மிக குறுகிய காலத்தில் கிடைப்பதுடன் மிகவும் பாதுகாப்பானதாகவும், உடனடியாக நடக்கவும் இயலும். அதுமட்டுமின்றி, தழும்புகள் இன்றியும் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. அதிகப்படியான வலி நிவாரணி மாத்திரைகள் எடுப்பதையும் தவிர்க்கலாம்.

    இந்த சிகிச்சை முறையானது முக்கியமாக இளம் வயதினர் மற்றும் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கும் இந்த சிகிச்சை மிகவும் பயன் உள்ளதாக அமைகிறது. இந்த குருத்தணு சிகிச்சை முறை முழங்கால் மூட்டிற்கு மட்டுமின்றி உடலில் மற்ற மூட்டு பகுதிகளுக்கும் ஜவ்வு பாதிப்பு (Cartilage Demage) தசை பாதிப்பு (Muscle Injury) போன்ற பிரச்சினைகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம். நான்காவது நிலையில் உள்ள தேய்மானத்திற்கு இந்த சிகிச்சை முறைகள் எதுவும் பயனளிக்காத நிலையில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதில் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை பற்றி நாம் நன்றாக அறிந்திருப்போம். இந்த முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட சிதைந்த மூட்டை மாற்றி செயற்கை உலோகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறை மிகவும் வெற்றிகரமாகவும் சில வாரங்களிலேயே இயல்பு நிலைக்கு திரும்பலாம். மணிசுந்தரம் மருத்துவமனையில் அனைத்து விதமான எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளுக்கும் சிறப்பான மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு: மணிசுந்தரம் மெடிக்கல் மிஷன், 0416-2256007, 2254007, செல்: 9994756090 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    Next Story
    ×