என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நோய் எதிர்ப்பாற்றல் தரும் முத்திரைகள்
Byமாலை மலர்7 April 2020 3:50 AM GMT (Updated: 7 April 2020 3:50 AM GMT)
முத்திரை என்பது நமது கைவிரல் நுனிகளை இணைத்து ஒரு அழுத்தம் கொடுத்து மன ஒருநிலைப்பாட்டுடன் செய்யும் யோக பயிற்சியாகும்.
மனித உடலில் முக்கியமான ராஜ உறுப்புக்கள் என்றழைக்கப்படும் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீரகப்பை சிறப்பாக இயங்க வேண்டும்.
நுரையீரல் செயல்திறன் குறையும் பொழுது சளி பிடிக்கும், இருமல் வரும், மூக்கடைப்பு வரும், பின்பு காய்ச்சல் வரும். அதேபோல் கல்லீரல் சக்தி ஓட்டம் குறைந்தால் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்படும். இதிலிருந்து நாம் உணர வேண்டியது ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ராஜ உறுப்புக்கள் நன்றாக இயங்க வேண்டும். அதற்கு சக்தி ஓட்டம் பிராண ஆற்றல் நன்கு கிடைக்க வேண்டும். மனித உடல் செல்களில் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் பஞ்சபூதத் தன்மைகள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) உள்ளது. இது அதனதன் விகிதத்தில் இயங்கினால் எந்த ஒரு நோயும் வராது. இந்த பஞ்ச பூதத்தின் கட்டுப்பாடு நமது கைவிரல் நுனிகளில் உள்ளன.
பெருவிரல் - நெருப்பு
சுண்டுவிரல் - நீர்
மோதிரவிரல் - நிலம்
நடுவிரல் - ஆகாயம்
ஆள்காட்டி விரல்- காற்று
நெருப்பு மூலகம் - இதயம், சிறுகுடல், இதய மேலுறையை கட்டுப்படுத்தும் (பெருவிரல் நுனி)
நில மூலகம் - மண்ணீரல், இரப்பையை கட்டுப்படுத்துகிறது (மோதிர விரல் நுனி)
காற்று மூலகம் - நுரையீரல், பெருங்குடலை கட்டுப்படுத்துகிறது (ஆள்காட்டி விரல் நுனி)
நீர் மூலகம் - சிறுநீரகம், சிறுநீரகப்பையை கட்டுப்படுத்துகிறது (சுண்டு விரல் நுனி)
ஆகாய மூலகம் - கல்லீரல், பித்தப்பையை கட்டுப்படுத்துகிறது (நடு விரல் நுனி)
முத்திரை என்பது நமது கைவிரல் நுனிகளை இணைத்து ஒரு அழுத்தம் கொடுத்து மன ஒருநிலைப்பாட்டுடன் செய்யும் யோக பயிற்சியாகும். வெறும் விரல்களை இணைக்கவில்லை. அதன் மூலம் பஞ்சபூதத்தை இணைக்கிறோம். அதனால் ஒவ்வொரு மூலகத்தைச் சார்ந்த உள் உறுப்புக்கள் பஞ்சபூத சக்தியை பெற்று மிகச் சிறப்பாக இயங்கும். ராஜ உறுப்புக்கள் நன்கு சக்தி பெற்று இயங்கும் பொழுது நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். எந்த ஒரு கிருமி, வைரசும் நம்மைத் தாக்காது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X