search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு ஒவ்வாமை
    X
    குழந்தைகளுக்கு ஒவ்வாமை

    குழந்தைகளுக்கு ஒவ்வாமை

    குழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தூசு, மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது.
    ஒவ்வாமை என்ற வார்த்தையை சொன்னாலே, உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், நம் நினைவிற்கு வரும். வெறும், 5 முதல் 10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று ஒவ்வாமை பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம்.

    குழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற தொடங்கும் ஆறு மாதங்களில் இருந்து, உணவு ஒவ்வாமை வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜியானது, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.

    ஒரு குழந்தைக்கு, பால் ஒவ்வாமை என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் வர வேண்டும். அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், ஒவ்வாமைக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்சினை இல்லை. வேறு காரணங்களால் இருக்கலாம்.

    குறிப்பிட்ட உணவால் ஒவ்வாமை என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அதே பாதிப்பு வர வேண்டும். குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்சினை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே எந்த உணவால் ஒவ்வாமை வருகிறது என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.

    இது தவிர, தூசு, மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர். இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்சினை இது.

    வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள், வளர்ப்பு பிராணிகளின் ரோமம், கரப்பான் பூச்சியால் வரும் அலர்ஜி என வீட்டுக்குள்ளும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதை பரிசோதித்து அறியவும் வசதிகள் உள்ளன.
    Next Story
    ×