search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் படிப்பு-விளையாட்டு
    X
    குழந்தைகளின் படிப்பு-விளையாட்டு

    குழந்தைகளின் படிப்பு-விளையாட்டு

    எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இல்லாமல் அவ்வப்போது குடும்பத்தில் உள்ளவர்களுடன் விளையாடி மகிழுங்கள். ஒவ்வொரு விளையாட்டும் அறிவு பூர்வமானது தான்.
    கோடை காலம். வெயில் கொளுத்தி வருகிறது. கொரோனா தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால் பள்ளி விடுமுறை நாளில் இந்நேரம் மாணவ செல்வங்களாகிய நீங்கள் கடல் உள்ள இடங்களுக்கு சென்று கடல் அலையில் கால் நனைத்தும், குளித்தும் மகிழ்ந்து இருப்பீர்கள். என்ன செய்வது. இந்த ஆண்டு கொரோனா உலக மக்களை பாடாய் படுத்தி விட்டது. இதனால், எங்கு பார்த்தாலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் வெளியில் வரவே தடை. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வர நேரிட்டாலும் பல வித சட்டதிட்டங்கள். இதனால், தாய்-தந்தையரின், தாத்தா மற்றும் உறவினர்களின் கரங்களை பற்றிக் கொண்டு எங்கும் செல்ல முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ஒருநாள் ஊரடங்கு என்றாலே நம்மால், வீட்டிற்குள் இருக்க முடியாது. ஊரடங்கு முடியும் நேரமான 6 மணி எப்ப வரும் என்று காத்துக் கிடப்போம். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மாதக்கணக்கில் ஊரடங்கு.

    இதனால், வீடுகளுக்குள் நாள் கணக்கில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு நேரம் தான் தொலைக்காட்சிகளை பார்ப்பது. இந்த நாட்களை எப்படி கடப்பது?. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்னும் நடைபெறவில்லை. கண்டிப்பாக நடக்கும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆகவே, அந்த வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அருமையான வாய்ப்பு. வீட்டில் இருந்த படியே பாடங்களை படிக்கலாம்.

    தெரியாததை தாய்-தந்தையரிடமோ அல்லது சகோதர-சகோதரியிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். படித்தது மனதில் நிற்கவில்லை என்றால் எழுதி, எழுதி பாருங்கள். மனதில் பதிந்து விடும். பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்தவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?, எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எழுத உள்ளவர்கள் அதற்காக தயார் ஆகலாம்.

    அதற்காக எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இல்லாமல் அவ்வப்போது குடும்பத்தில் உள்ளவர்களுடன் விளையாடி மகிழுங்கள். ஒவ்வொரு விளையாட்டும் அறிவு பூர்வமானது தான். சிறுவர்களுக்கு, விளையாட்டு தெம்பு தருகிறது. அன்பும், ஆரோக்கியமும் கொடுக்கிறது. பொறுமையும், பெருமையும் சேர்த்து தருகிறது. ஆகவே, அவரவர் மனநிலை, சக்தி, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வீட்டில் பொழுதை கழியுங்கள் ஊரடங்கு முடியும் வரை.
    Next Story
    ×