என் மலர்
பெண்கள் உலகம்

சுவையான சீரக மீன் குழம்பு
இந்த சீரக மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீன் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் விழுது - அரை கப்
உ.பருப்பு, வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்
கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
* மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
* புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்
* தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
* அத்துடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
* தக்காளி நன்றாக மசிந்து தொக்கு பதம் வரும் போது மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.
* அடுத்து அதில் தேங்காய் விழுது, புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
* குழம்பு கொத்திக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீனை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* மீன் வெந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
* புளிப்பு, காரம் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளலாம்.
* சுவையான சீரக மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மீன் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் விழுது - அரை கப்
உ.பருப்பு, வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்
கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
* மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
* புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்
* தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
* அத்துடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
* தக்காளி நன்றாக மசிந்து தொக்கு பதம் வரும் போது மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.
* அடுத்து அதில் தேங்காய் விழுது, புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
* குழம்பு கொத்திக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீனை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* மீன் வெந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
* புளிப்பு, காரம் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளலாம்.
* சுவையான சீரக மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






