என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி
    X

    ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

    அப்பளத்தில் செய்யப்படும் இந்த ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மசாலா அப்பளம் - 10,
    உருளைக்கிழங்கு (பெரியது) - ஒன்று,
    துருவிய பன்னீர் - 50 கிராம்,
    கரம்மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை,
    எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,
    பச்சை மிளகாய் விழுது, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    * உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவிக்கொள்ளவும்.

    * அத்துடன் உப்பு, துருவிய பன்னீர், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

    * ஒவ்வொரு அப்பளத்தையும் தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து சுத்தமான துணியால் ஒற்றியெடுக்கவும்.

    * உருளைக்கிழங்கு கலவையில் சிறிதளவு எடுத்து அப்பளத்தின் ஒரு பக்கம் வைத்து மெதுவாக உருட்டி தண்ணீரை தொட்டு ஓரங்களை அழுத்தி ஒட்டவும். இதே போல் எல்லா அப்பளங்களையும் செய்யவும்.


    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய அப்பளங்களை ஒவ்வொன்றாக அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    * சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

    * சுவையான ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் ரெடி.

    - உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×