search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பை கால்பந்து-2022

    நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்
    X

    நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

    • மாவட்ட அளவிலான இளைஞர் விழா - 2023 நடந்ததுதிருப்பத்தூர்
    • கலெக்டர் பேச்சு

    திருப்பத்தூர்:

    இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான இளைஞர் விழா - 2023 ஒரு நாள் மெகா நிகழ்ச்சி திருப்பத்தூர் அருகே மொளகாரம்பட்டி கிராமத்தில் ஹோலி கிராஸ் பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குநேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர்.பிரேம் குமார் தலைமை வகித்தார்.

    கல்லூரி தாளாளர் சலேத்மேரி சாமிநாதன் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் மேஜர் ரேணிசகாயராஜ் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்ட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வை யிட்டார்கள். பின்னர் கலெக்டர் பேசியதாவது;

    இந்த வகையான போட்டிகளை நடத்துவதன் மூலமாக தங்களுக்கு எந்த விதமான திறமை இருக்கின்றது என்று அறிந்து கொண்டு, உங்களை வளர்த்துக் கொண்டீர்களே ஆனால் வாழ்க்கை மாறும். கல்வி என்பது நம்முடைய சிந்தனையை ஊக்குவிப்பது தான். எவ்வாறு சிந்திப்பது என்று கற்றுக்கொடுப்பதுதான் கல்வியின் உடைய நோக்கமே, கிளர்க்காக மாற்றுவதோ ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மாற்றுவதோ நீதிபதியாக மாற்றுவதோ கல்வினுடைய நோக்கமல்ல, கல்வி தகுதியின் நோக்கம் தான் அது.

    நாம் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும், திற ன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய திறமைகளை என்னவாக இருக்கின்றது என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பாஸ்கரன், ஒன்றியக்குழு தலைவர் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×