search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்
    X

    புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்

    • புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில் சிறப்பு வழிபாடு.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 108 திவ்ய தேசங்களில் உள்ள திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவர் பெருமாள் கோவில், திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்நிலையில் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியில் கடைசி சனிக்கிழமையான இன்று அதிகாலை முதலே ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள், திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் குவிந் தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    இதேபோல் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்க டேச பெருமாள் கோவிலும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×