என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம்
- உற்சவமூர்த்திகளை வைத்து யாகசாலையில் 27 நட்சத்திரம் அரிசி மூலமாக வரைந்து வைத்தனர்.
- இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. காலையில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், லட்சுமணர், சீதாதேவி, சக்கரத்தாழ்வார், ஆண்டாள் நாச்சியார், கருடாழ்வார், அனுமன் ஆகிய சாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
பின்னர் யாகசாலை மண்டபத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவமூர்த்திகளை வைத்து யாகசாலையில் 27 நட்சத்திரம் அரிசி மூலமாக வரைந்து வைத்தனர். 108 கலசம் வைத்து ஸ்ரீரங்க சடகோப கைங்கரியசபா நிர்வாகி பாலாஜி பட்டர், திருவேங்கடநாதன் பட்டர் தலைமையில் 21 பட்டர்கள் கலந்து கொண்டு பல்வேறு மூலிகையை கொண்டு உலக நன்மைக்காக சுவாதி நட்சத்திர மகா யாகம் நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. கோவில் சார்பாக சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக துலாபாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிறந்த குழந்தையை வைத்து அதற்கு நிகராக காசுகளை வைத்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினார்கள். மேலும் காலையில் இருந்தே பக்தர்கள் கார், வேன் மூலமாக சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், ஆற்காடு , சேலம், திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்