search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில் தேர் சீரமைப்பு பணி தொடங்கியது
    X

    பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில் தேர் சீரமைப்பு பணி தொடங்கியது

    • இக்கோவிலில் கடந்த 40 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் உள்ளது.
    • தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

    பண்ருட்டி காந்தி ரோட்டில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர் பழுதடைந்து போனதால் கடந்த 40 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் உள்ளது. இக்கோவில் தேரை சீரமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையினரால் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

    இப்பணியை மீண்டும் தொடங்கி தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர் சீரமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் பண்ருட்டி நகரசபை தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு தேர் சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். இதில் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×