search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறல்
    X

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறல்

    • திருப்பதியில் தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகிறது.
    • பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக காத்து நிற்கின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த வாரம் வார விடுமுறை இறுதிநாளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஓரளவு பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.

    பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் வைகுண்டம் காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பி பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக காத்து நிற்கின்றனர்.

    பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயலும் போது அடிக்கடி பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூடுதல் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் சார்பில் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    பக்தர்களுக்கு அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.வார இறுதி விடுமுறை நாட்களில் தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வந்தால் சிரமமின்றி ஏழுமலையானை தரிசித்து செல்ல முடியும் என்றனர்.

    திருப்பதியில் நேற்று 87,698 பேர் தரிசனம் செய்தனர். 48,804 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×