என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
- அக்டோபர் 4-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது...
- 6-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மையான தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் உற்சவர் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்று விழா கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவில் தினசரி காலை, மாலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. மேலும் அடுத்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதி காலை 6 மணிக்கு தேர்த்திருவிழாவும், 5-ந்தேதி திருவோணம் நட்சத்திரத்தில் ரத்னங்கி சேவையும், விஜயதசமி அம்பு போடுதல், கண்ணாடி பல்லக்கு வீதி உலா புறப்பாடு, 6-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்