search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் 2-ந்தேதி கருட சேவை
    X

    கொடியேற்றப்பட்ட போது எடுத்தபடம்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் 2-ந்தேதி கருட சேவை

    • இந்த விழா வருகிற மார்ச் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • தேரோட்டம் 5-ந் தேதி நடக்கிறது.

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த விழா வருகிற மார்ச் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று முதல் நாள் இரவு அங்குரார்ப்பணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை கொடியேற்று விழா நடைபெற்றது.இதில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தங்க கருடசேவை 2-ந்தேதியும், தேரோட்டம் 5-ந் தேதியும், திருமலைராஜன் பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 7-ந்தேதியும், திருக்கண்ணபுரம் நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத் திருவிழா 12-ந்தேதியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×