search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் 3 நாள் தெப்ப உற்சவம்
    X

    திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் 3 நாள் தெப்ப உற்சவம்

    • வீரராகவர் பெருமாள் கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளினார்.
    • வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு அமாவாசை தினங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் கோவில் சுற்றுப்புற பகுதியில் தங்கி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய திரண்டனர்.

    மேலும் உற்சவர் வீரராகவர் பெருமாள் கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளினார்.

    வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    Next Story
    ×