search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராட்டை சுற்றிபாளையம் பைரவர் கோவிலில் நாளை தேய்பிறை அஷ்டமி பூஜை
    X

    ராட்டை சுற்றிபாளையம் பைரவர் கோவிலில் நாளை தேய்பிறை அஷ்டமி பூஜை

    • இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 13-ந் தேதி நடந்தது.
    • மண்டல பூஜைக்கு முன்பதிவுகளும் செய்யப்படு்கிறது.

    அறச்சலூர் ராட்டை சுற்றிபாளையத்தில் பைரவர் கோவில் உள்ளது. இங்குள்ள முன் மண்டபத்தில் 64 சிலைகளும் பைரவர்களுடைய அவதாரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 13-ந் தேதி நடந்தது.

    அதைத்தொடர்ந்து மண்டல பூஜையையொட்டி சாமிக்கு தினமும் அபிஷேகம் செய்யப்பட்டு் பூஜை நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) தேய்பிறை அஷ்டமி வருகிறது. இதையொட்டி அன்று மாலை 4 மணி அளவில் ஹர்ஷன ஆகர்ஷ்ன பைரவர், ஸ்வர்ண லிங்கத்துக்கு பக்தர்கள் தங்கள் கையால் பால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

    இதனால் சிறப்பு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது ஐதீகம். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை மண் விளக்கு பூஜையும் கோவிலில் நடைபெற்று வருகிறது. மண்டல பூஜைக்கு முன்பதிவுகளும் செய்யப்படு்கிறது.

    Next Story
    ×