search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி
    X

    கோபுர வாசல் வழியாக ஊடுருவிய சூரிய ஒளி.

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி

    • இந்த அதிசய நிகழ்வை இன்றும், நாளையும் பார்க்கலாம்.
    • ஏராளமான பக்தர்கள் வந்து கண்டு தரிசனம் செய்தனர்.

    சிற்ப கலையில் சிறந்து விளங்கும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மேற்குநோக்கிய சிவாலயம் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரிய ஒளி லிங்கத்சூதின் மீது படுவது வழக்கம்.

    சூரியன் மறையும் நேரத்தில் ஒளியானது கோவிலுக்கு வெளியே உள்ள தெவச கம்பத்தின் மீது பட்டு ராஜ கோபுரம் வழியாக உள்ளே நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியின் கொம்பு வழியாக மூலஸ்தானத்தில் உள்ள சிவ லிங்கைத்தின் மீது விழும்.

    இந்த அதிசய நிகழ்வானது நேற்று நடைபெற்றது. வான சாஸ்திரம் எவ்வித அறிவியல் தொழில் நுட்பங்களோ, நவீன உபகரணங்களோ இல்லாத அந்த காலங்களில் வான சாஸ்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து வருடத்தில் மாசி மாதம் 3 நாட்கள் மட்டும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் வகையில் இந்த கோவிலை கட்டியிருப்பது தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ளது.

    இந்த கோவிலில் சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புறமுள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து. கோவில் பிரகாரங்களை கடந்து நந்தியின் கொம்புகள் வழியாக ஊடுறுவி சென்று சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

    இந்த நிகழ்வின்போது தரிசனம் செய்தால் 7 பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என கூறப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியினை காண வருகை தருகின்றனர். 2-வது நாளான இன்றும், நாளையும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    முதல் நாளில் லிங்கத்தின் வலது பகுதியில் விழுந்த சூரிய ஒளி, 2-ம் நாளான இன்று இடது பகுதியிலும், 3-ம் நாளில் லிங்கத்தின் மைய பகுதியிலும் விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனால் ஏராளமான பக்தர்கள் தாரமங்கலம் சிவன் கோவிலை நோக்கி சென்றவண்ணம் உள்ளனர்.

    Next Story
    ×