என் மலர்tooltip icon

    வழிபாடு

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மகப்பெருவிழா நாளை தொடங்குகிறது
    X

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மகப்பெருவிழா நாளை தொடங்குகிறது

    • திருவிழா வருகிற மார்ச் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • மார்ச் 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப்பெருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி காலை 5-15 மணிக்கு மேல் 6-15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. திருவிழா வருகிற மார்ச் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனையும், இரவு 8 மணிக்கு கட்டளை தீபாராதனையும், அதைத்தொடர்ந்து சுவாமி - அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மார்ச் 5-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சுவாமி, அம்பாள் ஆகிய 2 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. தினமும் வெவ்வேறு சமுதாயம் சார்பில் கட்டளை பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் கவிதா, கோமதி, கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×