என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
விழுந்தயம்பலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
- இந்த விழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
- தினமும் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.
விழுந்தயம்பலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து வெட்டுமணி திருத்தல அதிபர் அந்தோணிமுத்து தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் மரிய மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடக்கிறது.
விழாவின் 21-ந்தேதி காலை 10 மணிக்கு அன்னை நகர் அருட்பணியாளர் அருள்தேவதாசன் தலைமை தாங்கி முதல் திருவிருந்து மற்றும் திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் பெர்டின் அனஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு அன்பு விருந்து, 22-ந்தேதி காலை 10 மணிக்கு சாமியார்மடம் அருட்பணியாளர் ஆல்பர்ட் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ரோமேரிக் ததேயு மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து கொடியிறக்கம், பகல் 11.30 மணிக்கு அன்பு விருந்து, மாலை 6.30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்