search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3½ டன் மலர்களால் புஷ்பயாகம்
    X

    புஷ்ப யாகம் நடந்தபோது எடுத்தபடம்.

    கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3½ டன் மலர்களால் புஷ்பயாகம்

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று முன்தினம் மாலை புஷ்ப யாகம் நடந்தது.

    அதையொட்டி அன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    மதியம் 2 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி என 12 வகையான மலர்களும், 6 வகையான இலைகளும் சேர்த்து மொத்தம் 3½ டன் எடையிலான மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புஷ்ப யாகத்துக்கு பயன் படுத்தப்பட்ட மலர்களை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், காணிக்கையாளர்களும் வழங்கினர்.

    Next Story
    ×