search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மேதாகுரு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை
    X

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மேதாகுரு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை

    • சாமிக்கு 108 தீபங்களை கொண்ட ஆரத்தி எடுத்தனர்.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று வியாழக்கிழமை என்பதால் கோவில் வளாகத்தில் உள்ள மேதா குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி சாமிக்கு 108 தீபங்களை கொண்ட பர்வ ஆரத்தி, சக்ர ஆரத்தி, கும்ப ஆரத்தி, மகா மங்கள ஆரத்தி எடுத்தனர்.

    அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×