search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன்
    X

    சமயபுரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன்

    • இன்று அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • இன்றுடன் பஞ்சப்பிரகார விழா நிறைவுபெறுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந்தேதி முதல் வசந்த உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக பஞ்சப்பிரகார உற்சவம் கடந்த 15-ந் தேதி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளினார். இதன்படி நேற்று இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மரகாமதேனு வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்றுடன் பஞ்சப்பிரகார விழா நிறைவுபெறுகிறது.

    Next Story
    ×