search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
    X

    பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

    • 8-ந்தேதி பூண்டி மாதாவின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.
    • 9-ந்தேதி கொடி இறக்கப்பட்டு மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறுகிறது.

    தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் அமைந்துள்ளது, பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம். இந்த பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் ஏந்தி வர பூண்டி மாதா பேராலயத்தின் முன்புறமுள்ள கொடி மரத்தில் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற மையக்கருத்தை வைத்து பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலையில் சிறிய தேர்பவனியும், சிறப்பு திருப்பலியும் பல்வேறு அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்படுகிறது.

    பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மலர்களாலும், மின் விளக்கு அலங்காரத்திலும் பூண்டி மாதாவின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

    அதற்கு அடுத்த நாள் 9-ந் தேதி காலை மரியாள்-தாய்மையின் தலைப்பேறு என்ற பொருளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறுகிறது.

    பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×