search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்
    X

    அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்

    • மூலவருக்கு சுப்ர பாதம், தோமால சேவை, அர்ச்சனை நடந்தது.
    • பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    திருப்பதி மாவட்டம் அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி அதிகாலை மூலவருக்கு சுப்ர பாதம், தோமால சேவை, அர்ச்சனை நடந்தது. அதைத்தொடர்ந்து யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள், பவித்ர பிரதிஷ்டை சாஸ்திர பூர்வமாக நடந்தது.

    பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், சிறப்புப்பூஜைகளும் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன.

    நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×