என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பஞ்சவடி கோவிலில் வசந்த உற்சவ விழா 26-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்23 May 2023 8:31 AM GMT
- 6-ந்தேதி விசேஷ திருமஞ்சனம், புஷ்ப பந்தலில் அருள்பாலித்தல் நடக்கிறது.
- 28-ந்தேதி காய்கறி பந்தலில் அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பஞ்சவடியில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை பட்டாபிஷேக ராமனாக காட்சியளித்து அருள்பாலித்து வரும் ஸ்ரீசீதா தேவி சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு வசந்த உற்சவ விழா வசந்த மண்டபத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 26-ந்தேதி மாலை 5 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம், புஷ்ப பந்தலில் அருள்பாலித்தல், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 27-ந்தேதி மாலை 5 மணிக்கு விசேஷ பழப்பந்தலிலும், 28-ந்தேதி காய்கறி பந்தலிலும் அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X