search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பஞ்சவடி கோவிலில் வசந்த உற்சவ விழா 26-ந்தேதி தொடங்குகிறது
    X

    பஞ்சவடி கோவிலில் வசந்த உற்சவ விழா 26-ந்தேதி தொடங்குகிறது

    • 6-ந்தேதி விசேஷ திருமஞ்சனம், புஷ்ப பந்தலில் அருள்பாலித்தல் நடக்கிறது.
    • 28-ந்தேதி காய்கறி பந்தலில் அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பஞ்சவடியில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை பட்டாபிஷேக ராமனாக காட்சியளித்து அருள்பாலித்து வரும் ஸ்ரீசீதா தேவி சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு வசந்த உற்சவ விழா வசந்த மண்டபத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 26-ந்தேதி மாலை 5 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம், புஷ்ப பந்தலில் அருள்பாலித்தல், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 27-ந்தேதி மாலை 5 மணிக்கு விசேஷ பழப்பந்தலிலும், 28-ந்தேதி காய்கறி பந்தலிலும் அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×