என் மலர்tooltip icon

    வழிபாடு

    நடராஜப்பெருமானின் நடனத் தத்துவம் உணர்த்துவது என்ன?
    X

    நடராஜப்பெருமானின் நடனத் தத்துவம் உணர்த்துவது என்ன?

    • நடராஜர் இந்துக் கடவுளான சிவபெருமானின் நடனத் தோற்றமாவார்.
    • நடனக் கோலத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவருக்காக சிவன் ஆடினார்.

    நடராஜ தத்துவம் என்பது ஆனந்த தாண்டவம் ஆடும் நடராசரின் தோற்றத்தினை விளக்குவதாகும். நடராஜர் இந்துக் கடவுளான சிவபெருமானின் நடனத் தோற்றமாவார். இந்நடனக் கோலத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவருக்காக சிவன் ஆடினார்.

    நடராஜர் வடிவில்; இரு பக்கமும் விரிந்திருக்கும் சடையுடன் கூடிய நடனத்தோற்றம் உயிர்களுக்கு இறைவன் இடைவிடாது செய்யும் ஐந்து தொழில்களைக் குறிக்கிறது. நடராஜப்பெருமானின் வலது கால், முயலகனின் மீது ஊன்றிய திருவடியானது, ஆணவ எண்ணத்தை குறிப்பதாகவும் இறைவனின் மறைத்தல் தொழிலை உணர்த்துகிறது. இடது கால் தூக்கிய திருவடியானது சிவனின் அருளல் தொழிலைக் குறிக்கிறது.

    இத்திருவடியை, இடது கையின் விரல் ஒன்றைச் சுட்டிக் காட்டி, சிவனின் அருளல் தத்துவத்தை உணர்த்துகிறது. நடராஜரின் உடுக்கை ஏந்திய வலது கை படைத்தல் தொழிலைக் குறிக்கிறது. நடராஜரின் தீயை ஏந்திய இடது கை, அழித்தல் தொழிலைக் குறிக்கிறது.

    நடராஜரின் வலது அபய கரமானது, காத்தல் தொழிலைக் குறிக்கிறது. நடராஜப்பெருமானின் நடனத் தத்துவம் உணர்த்துவது இதுவே.

    Next Story
    ×